Skip to content
Home » மெரினாவில் கடலுக்குள் தப்பி ஓடிய கொள்ளையன்…. போலீசார் விரட்டி பிடித்தனர்

மெரினாவில் கடலுக்குள் தப்பி ஓடிய கொள்ளையன்…. போலீசார் விரட்டி பிடித்தனர்

சென்னை மெரினா கடற்கரை அருகே பட்டினபாக்கம் வரை செல்லக்கூடிய சர்வீஸ் சாலையில்நேற்று  நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு பெண் ஆட்டோவில் இருந்துள்ளார். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மழை பெய்வதால் தாங்களும் இங்கு சற்று நேரம் இருந்துவிட்டு செல்கிறோம் என்று கூறி அங்கு நின்றுள்ளனர். அப்போது, திடீரென அந்த பெண்ணை தாக்கிய அந்த 4 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு காதில் இருந்த தங்க கம்மல், கையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

அப்போது, அந்த வழியாக போலீசார் எதிர்சாலையில் வந்தனர். அந்த பெண் கூச்சலிடவே 4 பேர் கொண்ட கும்பல் வேகமாக ஓடியதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் அந்த கும்பலை துரத்தி சென்றனர். கொள்ளையில் ஈடுபட்டவர்களில் 3 பேர் தப்பியோடிய நிலையில் ஒரு நபர் மெரினா கடற்கரையில் இறங்கி கடலுக்குள் குதித்தார். அந்த நபரை துரத்தி சென்ற போலீசார் கடலுக்குள் குதித்த அந்த நபரை அதிரடியாக பிடித்தனர்.

பிடிபட்ட நபர் அயனாவரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சந்தோஷ்குமார் மீது ஏற்கனவே கொலைமுயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. தப்பியோடிய எஞ்சிய 3 பேரும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய 3 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மதுபோதையில் 4 பேர் கொண்ட கும்பல் தாக்கி கழுத்தறுத்ததில் பாதிக்கப்பட்ட பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!