Skip to content
Home » வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

வாகனம் மோதி பெரம்பலூர் வாலிபர் பலி

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் பிரிவு சாலையில், ஒரு வாலிபர் இறந்து கிடந்தார்.  தகவல் அறிந்து சென்ற பெரம்பலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூரை சேர்ந்த, கோவிந்தன் மகன் அருண்  (27), என்பதும், அரணாரையில், சத்தியபாலன் என்பவரிடம் கார் டிரைவராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

அருண் பைக்கில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதி அவர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவர் மீது மோதிய வாகனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!