Skip to content
Home » ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக 11 லட்சம் அபேஸ்…. 2 பேர் கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆண்டிமடம் அருகே ஜெமீன் மேலூரை சேர்ந்தவர் சிவா. இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் ரூ.11 லட்சம் வரையிலான பணத்தை சிவா கொடுத்த நிலையில், கொல்கத்தாவில் ரயில்வே ஸ்டேசனில் குடிநீர் குழாய் சரிபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் முதலில் கவனிக்க கூறி அதற்கான பயிற்சியையும் சிவாவிற்கு வழங்கியுள்ளனர். இந்த நிலையில், மிகவும் குறைவான சம்பளம் கொடுத்ததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவா போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவாஜி ஆகிய 2 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தில் டில்லியை சேர்ந்த மனிஷ் பாண்டே என்பவரின் கீழ் இது போன்ற கும்பல் செயல்படுவதை அறிந்த போலீசார், அவரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!