Skip to content
Home » பாலியல் வன்கொடுமை செய்து உ.பி.சிறுமி கொலை…. குற்றவாளிக்கு தூக்கு

பாலியல் வன்கொடுமை செய்து உ.பி.சிறுமி கொலை…. குற்றவாளிக்கு தூக்கு

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அங்குள்ள ஒரு கிராமத்தில்  கடந்த 2022ம் வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி, 9 வயது சிறுமி இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பேலீசார்,  அதே கிராமத்தைச் சேர்ந்த குற்றவாளியை கைது செய்தனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து  அவர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. வழக்கை விசாரித்த  நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தது. காசியாபாத் போக்சோ நீதிமன்றம் தண்டனையை அறிவித்தது. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!