Skip to content
Home » ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

ரூ 5 லட்சம் லஞ்சம்… பஞ்சாப்பில் ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது…

பஞ்சாப்பில் பதிண்டா ஊரக தொகுதிக்கு உட்பட்ட குடா கிராமத்துக்கான அரசு மானியம் ரூ.25 லட்சத்தை வழங்குமாறு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமித் ரத்தாவிடம் கிராமத்தலைவர் மற்றும் பொதுமக்கள் மனு ஒன்றை அளித்திருந்தனர்.  அரசு மானிய தொகையை விடுவிப்பதற்கு ரூ.5 லட்சம் லஞ்சம் தருமாறு எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ரஷிம் கார்க் கிராமத் தலைவரிடம் கேட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் எம்எல்ஏவின் உதவியாளர் ரஜிம் கார்க்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரூ.4 லட்ச பணத்துடன்  கைது செய்தனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எம்.எல்.ஏ. அமித் ரத்தாவை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!