Skip to content
Home » புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி…

புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி…

1432- ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தியின் இன்று கரூர் மாவட்டம், புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர்தலைவர் பிரபுசங்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தகுதியுடைய நபர்களுக்கு
கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கும்
மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது…

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட புகளூர், கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம். அரவக்குறிச்சி, கடவூர், மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களை சேர்ந்த 203 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 06.06.2023, 07.06.2023, 08.06.2023 ஆகிய நாட்களில் புகளூர் வட்டத்திலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 06.06.2023, 07.06.2023 மற்றும் 08.06.2023 ஆகிய நாட்களில் கடவூர் வட்டத்திலும், கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அவர்கள் 06.06.2023, 07.06.2023 மற்றும் 08.06.2023 ஆகிய நாட்களில் மண்மங்கலம் வட்டத்திலும், குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியர் 06.06.2023, 07.06.2023, 08.06.2023 மற்றும் 09.06.2023 ஆகிய நாட்களில் கிருஷ்ணராயபுரம் வட்டத்திலும், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) 06.06.2023, 07.06.2023, 08.06.2023, 09.06.2023 மற்றும் 13.06.2023 ஆகிய நாட்களில் அரவக்குறிச்சி வட்டத்திலும், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்கள் 06.06.2023, 07.06.2023, 08.06.2023,

09.06.2023 13.06.2023 ஆகிய நாட்களில் குளித்தலை வட்டத்திலும், கரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் 06.06.2023.07.06.2023, 08.06.2023 மற்றும் 09.06.2023 ஆகிய நாட்களில் கரூர் வட்டத்திலும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய்த் தீர்வாயத்தினை நடத்துவர்கள்.

வருடத்திற்கு ஒருமுறை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. ஜமாபந்தி பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காக நடைபெற்று வருகின்றன. அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும் நபர்களின் பெயர்கள் பதிவேடுகளில் உள்ளனவா என்பதையும், பயிர் கணக்குகள் உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

புகளூர் வட்டத்திற்கு 06.06.2023, 07.06.2023, 08.06.2023 ஆகிய 3 நாட்கள் ஜமாபந்தி நடை பெறுகிறது. புகளூர் வட்டத்திற்குட்பட்ட 27 வருவாய் கிராமங்களில் இன்று தென்னிலை குறுவட்டத்திற்குட்பட்ட அஞ்சூர், துக்காச்சி, தென்னிலை மேல்பாகம், தென்னிலை தென்பாகம், தென்னிலை கீழ்பாகம், கார்வழி,மொஞ்சனூர் மேல்பாகம், மொஞ்சனூர் கீழ்பாகம். எல்லைக்காட்டு. ராமச்சந்திரபுரம் ஆகிய 09 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 77 பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை பெற்று அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

புகளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் வருவாய்த்துறையின் மூலம் 5 நபருக்கு பட்டாவும், 3 நபருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவும், 10 நபருக்கு மின்னணு குடும்ப அட்டை திருத்தமும், ஆக மொத்தம் 18 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் தண்டயுதாபாணி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மனோரஞ்சிதம் புகளூர் வட்டாட்சியார் முருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளார்(பொது) பிரபு உட்பட அரசு துறை அலுவலர் பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஜமாபந்தி முடியும் நாளில் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியான குடிகள் மாநாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!