Skip to content
Home » கிடப்பில் கிடக்கும் சாலை பணி.. அதிகாரிகள் கவனிப்பார்களா..?..

கிடப்பில் கிடக்கும் சாலை பணி.. அதிகாரிகள் கவனிப்பார்களா..?..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்,கிழக்கு கவிநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு ராம்தியோட்டர் வழியாக செல்லும் சாலையில் சாலை (அந்தப்பகுதியில் மாயானமும் உள்ளது) சீரமைப்பு பணிக்காக கருங்கல் ஜல்லிகள் சாலை நெடுகிழும் கொட்டப்பட்டு நீண்ட நாட்களாக அப்படியே கிடக்கிறது. இன்றுவரை சாலை போடவில்லை.மேலும் இந்த

சாலையில் இரவில் தெரு விளக்கு கிடையாது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இறந்தவர்கள் உடலை மாயானத்திற்கு எடுத்துச் செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதற்கு எப்போது தீர்வு ஏற்படும் என்பது அப்பகுதிமக்களின் கேள்வியாக உள்ளது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட  அதிகாரிகள்  உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!