Skip to content
Home » புதுகை அஞ்சலகங்களில் தங்கபத்திர முதலீடு….2.5% வட்டி உண்டு

புதுகை அஞ்சலகங்களில் தங்கபத்திர முதலீடு….2.5% வட்டி உண்டு

  • by Senthil

புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் பொதுமக்கள் தங்கபத்திரத்தில் முதலீடு செய்து  பயன்பெறலாம் என கோட்ட அஞ்சல்தறை கண்காணிப்பாளர்கு.தங்கமணி தெரிவித்துள்ளார். இது குறித்து கு. தங்கமணி கூறியதாவது:

புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் ஆர்பிஐ. யின் தங்கபத்திர திட்டம்   வரும் 19.12.2022 முதல் 23.12.2022 வரை நடைமுறையில்  உள்ளது . இத்திட்டத்தில் முதலீடு  செய்ய ஒரு கிராம் Rs 5409/- என ஆர்பிஐ. நிர்ணயம் செய்துள்ளது. கூடுதலாக, முதலீட்டு தொகைக்கு  ஆண்டிற்கு  2.5% வட்டியும் உண்டு. மேலும் விவரங்களை அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் அல்லது  9865546641 என்ற அலைபேசி எண்ணிலும் அறிந்து கொள்ளலாம். சென்ற நிதியாண்டில் 171 வாடிக்கையாளர்கள் 2622 கிராம், தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர் . எனவே இந்த அரிய வாய்ப்பை பொது மக்கள்  அனைவரும்  பயன்படுத்திக் கொள்ளுமாறு
கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!