Skip to content
Home » பொன்னியின் செல்வன்- 2 இசை வெளியீட்டு விழா.. ரஜினியும் பங்கேற்பு..

பொன்னியின் செல்வன்- 2 இசை வெளியீட்டு விழா.. ரஜினியும் பங்கேற்பு..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தச் சூழலில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா புரொடக்ஷன் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளது. முதல் பாகம் சுமார் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (29.03.2023) நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என கூறப்பட்டிருந்தது. இன்றைய நிகழ்ச்சியில் ரஜினியும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!