Skip to content
Home » கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

கோவை அருகே டூவீலர் நாய் மீது மோதி விபத்து …. அதிமுக நிர்வாகி பலி…..

  • by Senthil

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு திரு.வி.க வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (62) இவர் அதிமுக கட்சியில் கிணத்துக்கடவு பேரூராட்சி 5-வது வார்டு கிளைத் தலைவராக உள்ளார். இவருக்கு ஈஸ்வரி (52)என்ற மனைவி உள்ளார். கிருஷ்ணகுமார் இன்று மாலை கிணத்துக்கடவு அருகே ஏழுர் பிரிவு பகுதியில் கோவை பொள்ளாச்சி நான்கு வழி சாலையில் இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் ரமேஷ்சுடன் வந்தார் . இருசக்கர வாகனத்தை கிருஷ்ணகுமார் ஓட்டினார்.அப்போது நான்கு வழிச்சாலையின் குறுக்கே நாய் சென்றது. நாய் மீது இருசக்கர வாகன மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருஷ்ணகுமார் நான்கு வழிச்சாலையின் நடுவில் உள்ள இரும்பு தடுப்பு கம்பி மீது பலமாக மோதினார். இதில் கிருஷ்ணகுமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் பலியானார். ரமேஷ் சாதாரண காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!