Skip to content
Home » உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 21 துப்பாக்கி குண்டு முழங்கி இறுதி அஞ்சலி

உயிரிழந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 21 துப்பாக்கி குண்டு முழங்கி இறுதி அஞ்சலி

ஆவடி போலீஸ் கமிஷனர் மோப்பநாய் பிரிவில் இருந்த டோனி என்கிற டாபர்மேன் வகையை சேர்ந்த மோப்பநாய் இருதய கோளாறு காரணமாக இன்று உயிரிழந்தது.  2014ம் ஆண்டு பிறந்து  45 நாட்கள் ஆன நிலையில் சென்னை மோப்ப நாய் பிரிவில் டோனி சேர்க்கப்பட்டது. அது முதல் கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட கிட்டத்தட்ட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக டோனி செயலாற்றி உள்ளது. 2017 ஆம் ஆண்டில், டோனி மாநில அளவில் காவல் துறையில் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. மேலும் 2020ல் அடையாறில் நடைபெற்ற கெனல் கிளப்மீட்டில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. சென்னை மாநகர காவலில் இருந்து பிரிந்து கடந்த மே மாதம்  ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 8 ஆண்டுகள் போலீசாருக்கு துணையாக இருந்த டோனி உயிரிழந்ததை தொடர்ந்து மலர் துாவி மரியாதை செலுத்தி, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கி இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!