Skip to content
Home » திருச்சியில் மதுபானங்கள் பதுக்கலா? கமிஷனர் சத்யபிரியா அதிரடி சோதனை

திருச்சியில் மதுபானங்கள் பதுக்கலா? கமிஷனர் சத்யபிரியா அதிரடி சோதனை

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா அரசு மது பானத்தை கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா என  திருச்சி மாநகரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்ரீரங்கத்தை அடுத்த மேலூரில் பிரபு என்பவரின் வீட்டிற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தபோது அங்கு அவர் மதுபானங்களை வைத்திருந்தது தெரிய வந்தது இதனை எடுத்து அதனை பறிமுதல் செய்ததோடு அவர் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதே போல் டாஸ்மாக் கடையில் அரசு மதுபானத்தை வாங்கி  கள்ள சந்தையில் விற்பதற்காக வயதான மூதாட்டி தங்க பொண்ணு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.   அவரிடம் இருந்த மதுபானங்களை பறிமுதல் செய்ததோடு அவரது வாழ்வாதாரத்திற்கு தகுந்த வழியை ஏற்படுத்தி தருவதாக மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா உறுதியளித்தார்.

அரசு மது பானங்களை கள்ள சந்தையில் விற்பனை செய்ததாகவும், விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததாகவும் 76 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 78 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் –
மேலும் 78 நபர்களிடமிருந்து 605 மது பாட்டில்கள் கைப்பற்றப்
பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!