Skip to content
Home » போக்சோவில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை….

போக்சோவில் கைதான வாலிபருக்கு 10 ஆண்டு சிறை….

  • by Senthil

கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தங்கராஜ்(42) என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்ததன் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டது. இந்தநிலையில் இவ்வழக்கு விசாரணை கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தங்கராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை செய்த புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர் படுத்திய நீதிமன்ற காவலர் பரசுராமன் ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!