Skip to content
Home » பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

பெரம்பலூரில் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி … கலெக்டர் துவக்கி வைத்தார்..

பெரம்பலூரில் நான் முதல்வன் போட்டித்தேர்வு திட்டத்தின் கீழ் இலவச பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார் . தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக பணியாளர் தேர்வு ஆணையம் / வங்கி / ரயில்வே போன்ற தேர்வு வாரியங்களின் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பை

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று 11.45 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன் , பயிற்றுநர்கள் கவிதா, சுஜாதா மற்றும் 64 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!