Skip to content
Home » பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

பெரம்பலூரில் பிரபல ரவுடி சாலை விபத்தில் பலி…

பெரம்பலூர் மாவட்டம் , கோனேரி பாளையத்தைச் சேர்ந்த மோகன் மகன் ரெஜி என்ற ரகுநாத்(31). இவர் தனது சொந்த இருtக்கர வாகனத்தில் அம்மா பாளையத்தில் உள்ள தனது தாயை பார்ப்பதற்காக பெரம்பலூரில் இருந்து துறையூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அம்மாபாளையம் பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் 108க்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பிரபல ரவுடி ரெஜி என்ற ரகுநாத் உயிரிழந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலவில் உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக விபத்து நடந்ததா இல்லை திட்டமிட்டு யாரேனும் முன் விரோத காரணமாக கொலை செய்துள்ளனரா என பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!