Skip to content
Home » பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

பெரம்பலூர் அருகே வயதான தம்பதி தற்கொலை….. போலீஸ் விசாரணை

  • by Senthil

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர்கள் தியாகராஜன் – பானுமதி தம்பதியினர், இவர்களுக்கு கதிரேசன் என்ற மகனும் கவிதா என்ற மகளும் உள்ளனர். கதிரேசன் திருமணம் ஆகி விழுப்புரம் மாவட்டம் உழிப்புரத்தில் உள்ளார்.கவிதா திருமணமாகி பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் மேட்டூரில் உள்ளார். இந்த நிலையில் தியாகராஜனும்,

கவிதாவும் லாடபுரத்தில் தங்கள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை இவர்கள் வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்த போது இருவரும் வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் நகர போலீசார் இவர்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!