Skip to content
Home » பெரம்பலூரில் வேன் விபத்து..2 பெண்கள் பலி…. கிரிவலத்துக்கு சென்றபோது சோகம்

பெரம்பலூரில் வேன் விபத்து..2 பெண்கள் பலி…. கிரிவலத்துக்கு சென்றபோது சோகம்

மதுரை மாவட்டம் மடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த அமுதா, ராணி, கோமதி, உள்ளிட்ட 19 பேர் வேனில் மதுரையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்காக  நேற்று இரவு சென்றனர். இவர்கள் சென்ற வேன்,  திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் விஜய கோபாலபுரம் என்ற இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது  மோதியது.

இதில்  சம்பவ இடத்திலேயே ஜெயமதி(50) என்ற பெண் ஒருவர் பலியானார். வேனில் பயணித்த 18 பேர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி  கோமதி(40)  என்ற பெண் இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விபத்து குறித்து பாடலூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!