பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை ஏரி மேற்கு திசையில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக பெரம்பலூர் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் தூக்கில் தொங்கிய நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர்.இறந்த நபர் பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்த ஜோதிவேல் என்பவரின் 21 வயது மகன் மதியழகன் என்பது தெரியவந்தது . போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மதியழகன் கடந்த சனிக்கிழமை இரவு தங்கள் வீட்டில் குடித்துவிட்டு வந்து மதுபோதையில் தனது தந்தையிடம் சண்டையிட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார் அதிலிருந்து அவர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.

பல இடங்களில் தேடி பார்த்த மதியழகனின் குடும்பத்தினர் கடந்த புதன்கிழமை அன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் மதியழகனை தேடி வந்த போலீஞாருக்கு போன மதியழகன் இன்று பெரம்பலூர் அருகே அரணாரை ஏரி யின் மேற்கு திசையில் தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இறந்தது மதியழகன் என்று உறுதியானது. இதனையடுத்து இறந்த மதியழகனின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மதியழகனின் இறப்பிற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன இளைஞர் தற்போது சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.