Skip to content
Home » ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் விழா …..முத்து கிரீடத்துடன் நம்பெருமாள் எழுந்தருளினார்

  • by Senthil

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன்  நேற்று தொடங்கியது. நேற்ற அதிகாலை  நம்பெருமாள்  விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு  அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார்.இரவில் மூலஸ்தான் சென்றடைந்தார்.

பகல் பத்து இரண்டாம் திருநாளையொட்டி இன்று நம்பெருமாள்  
முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன், பவழ மாலை அடுக்கு பதக்கங்கள், முத்து சரம், அண்ட பேரண்ட பட்சி மாலை திருவாபரணங்கள் சாற்றி சிறப்பு தரிசனத்தில் அர்ஜூன மண்டபத்தில்  எழுந்தருளினார். . இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர்  சேகர் பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!