Skip to content
Home » சிக்கல் நெல்கொள்முதல் நிலையம்…. நாகை கலெக்டர் திறந்தார்

சிக்கல் நெல்கொள்முதல் நிலையம்…. நாகை கலெக்டர் திறந்தார்

நாகை மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு இடங்களில் புதிதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஊரக வளர்ச்சித் துறை மூலமாக நாகை மாவட்டத்தில் இதுவரை 10 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தலாரூ. 28.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

சிக்கல் பகுதியில் கட்டப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்  திறந்து வைத்தார். நிகழ்ச்சியில்  சட்ட மன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய கலெக்டர் தம்புராஜ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளிடம், கையூட்டு பெறாமல் ஊழியர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!