Skip to content
Home » ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக-வினர் மௌன அஞ்சலி…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திமுக-வினர் மௌன அஞ்சலி…

ஒடிசா மாநிலம் ரயில் விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய விபத்து ஒடிசாவில் நேற்று நடந்தது. ஒரு ரயில் தடம் புரண்ட மற்றொரு பெட்டியின் மீது மோதியதால் பல பெட்டிகள் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 280 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதி பாளையம் பகுதியில் மாமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் ஒடிசா மாநிலத்தில் உயிர் இழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று அஞ்சலி

செலுத்தினர். பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு பசுபதிபாளையம் மற்றும் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் திமுக சார்பாக திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!