Skip to content
Home » விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

விழுப்புரம்…..நர்சிங் மாணவி கழுத்தறுத்து கொலை…. காதலன் வெறி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகள் தரணி (19).  இவர்  விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பட்டப்படிப்பு படித்து வந்தார். தரணி  இன்று காலை தனது வீட்டுத்தோட்டத்தில் இருந்தபோது, தோட்டத்தில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் தரணியைப் பின்பக்கமாகப் பிடித்து அவரது கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

தரணி அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தரணியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

விக்கிரவாண்டி போலீசார்  வந்து தரணியின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும்,  தரணியை கொலை செய்த அந்த இளைஞரையும் பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கணேஷ் என்ற 25 வயது இளைஞரை தரணி காதலித்து வந்ததாகவும், கணேஷ் கஞ்சாவிற்கு அடிமையானதால் அவருடன்பழகுவதை தரணி குறைத்துக் கொண்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தரணியை கணேஷ் கொலை செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தரணியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞர் கணேஷை காவல்துறையினர் இரண்டு மணிநேரத்தில் கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்தபோதே மாணவியை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!