பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டுள்ளார். 2ம் நாளான இன்று காலை 11.30 மணி வரை சுற்றுலா பயணிகள் படகில் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏற்கனவே பாறைக்கு சென்றிருந்த பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.பாதுகாப்பு காரணங்களை காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
