Skip to content
Home » எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

எனது வீட்டில் ஐடி சோதனை நடைபெறவில்லை…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கரூர், சென்னை, கோவை உள்பட  பல்வேறு இடங்களில்  இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   மின்துறை அமைச்சர்  செந்தில் பாலாஜி வீடுகளிலும் சோதனை நடப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

கரூர், சென்னையில் உள்ள எனது வீடுகளில் வருமானவரி சோதனை நடைபெறவில்லை. எனது தம்பி வீடு மற்றும் அவரது நண்பர் வீடுகளில் சோதனை நடக்கிறது.  வருமான வரி சோதனை முடிந்த பிறகு இது தொடர்பாக  கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!