Skip to content
Home » நீட் தேர்வு ரத்து ரகசியம்…. அரியலூரில் வெளியரங்கமாக்கிய அமைச்சர் உதயநிதி

நீட் தேர்வு ரத்து ரகசியம்…. அரியலூரில் வெளியரங்கமாக்கிய அமைச்சர் உதயநிதி

அரியலூரில்  அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அரசு  மருத்துவ கல்லூரிக்கான மருத்துவமனையை இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது:
நான் தேர்தல் பிரசாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் என்று குறிப்பிட்டதை தற்போது எதிர்க்கட்சித் தலைவர்.  அது என்ன ?என்று ஒவ்வொரு மேடைகளிலும் விமர்சித்து வருகிறார்.
நான் தேர்தல் பிரசாரத்தில் கூறியது போலவே, சட்ட மன்றத்தில் நான் பேசிய முதல் கன்னிப் பேச்சில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய அனிதாவின் பெயரில் அரங்கம் அமைக்க வேண்டும் என்று பேசினேன்.
இன்று அரியலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட மருத்துவர் கல்லூரி வளாகத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்திற்கு சகோதரி அனிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. அனிதா நினைவு அரங்கம் என்று இது அமைக்கப்படுகிறது. இதை பார்க்கும் பொழுதெல்லாம் நீட் தேர்வுக்காக நாம் போராடுவது நினைவிற்கு வரும்.

அண்மையில் பாரதப் பிரதமரை டில்லியில் சந்தித்தபோது நான் முதலில் வைத்த கோரிக்கை நீட் தேர்வு ரத்து என்பது தான். அதற்கு பாரதப் பிரதமர் மோடி நீட் தேர்வு தேவை என்பதற்கான காரணங்களை எடுத்துக் கூறினார் .ஆனால் நான் தமிழகத்தில் மாணவர்கள் நீட் தேர்வை ஏற்கவில்லை. திமுக நீட் தேர்வு ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டத்தினை தொடரும் என்று கூறிவிட்டு வந்துள்ளேன். திமுக சார்பில் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்பது  தான் எனது நீட் தேர்வு ரத்து  ரகசியம் .

இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுவரை கூறிவந்த நீட் தேர்வின் ரகசியம் இன்று அரியலூரில் அவரால் வெளியரங்கமாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடப்படதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!