Skip to content
Home » மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம்… தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினார்

மயிலாடுதுறையில் புதிய பஸ் நிலையம்… தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினார்

மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13.5 ஏக்கர் இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு 7 வருடங்களுக்கு முன் வாங்கப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் புதிய பேருந்து நிலையம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. முந்தைய ஆட்சியில் மயிலாடுதுறையில்புதிய பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தை தனியார் கட்டிக்கொண்டு  20 ஆண்டுகளுக்குப் பிறகு நகராட்சிக்கு ஒப்படைக்கும் திட்டத்திற்கு அறிவிப்பு கொடுத்தனர். இதற்கு பொதுமக்களையே பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது யாரும் அதை எடுக்க முன்வரவில்லை

இந்நிலையில் திமுக அரசானது மயிலாடுதுறையில்புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021-2022-இன்கீழ் ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் அவசரக் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்துக்கான பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், நிவேதா முருகன் நகர மன்ற தலைவர் செல்வராஜ், உண்டி குழு தலைவர் காமாட்சி மூர்த்தி. நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி முன்னிலையில் தருமபுரம் ஆதீனம் 27-வது சன்னிதானம் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இவ்விழாவில், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மக்களின் 25 ஆண்டு கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி இன்று துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!