Skip to content
Home » முன்விரோதம் காரணமாக திருச்சி அருகே வாலிபர் கொலை..

முன்விரோதம் காரணமாக திருச்சி அருகே வாலிபர் கொலை..

திருச்சி-கல்லணை ரோட்டில் உள்ள கிளிக்கூடு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஸ் (33). அதே பகுதியை சேர்ந்தவர் அசோக் (35). இருவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு பிரச் சனை ஏற்பட்டுள்ளது என கூற ப்படுகிறது. இதனால் இருவ ருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு பிரகாஸ், அசோக் உள்பட 4 பேர் கிளிக்கூடு கடைவீதியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மது போதை யில் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. வாக் குவாதம் முற்றிய நிலையில்அசோக் மற்ற இருவரும் சேர்ந்து பிரகாஷை முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் இதில் பிரகாஷ் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த நெ.1 டோல்கேட் போலிசார் விரைந்து சென்று பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி யோடிய அசோக் உள்பட 3 பேரை போலிசார் வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்ப வம் அப்பகுதியில் பெரும்பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!