Skip to content
Home » கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

கலப்பட விதை நெல்…..பாதிக்கப்பட்ட விவசாயி… கரூர் கலெக்டரிடம் புகார்

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேல சுக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்ற விவசாயி நங்கவரம் வேளாண்துறைக்கு சொந்தமான விதை நெல் அலுவலகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பொன்மணி என்ற ரக விதை நெல் வாங்கி வந்து தனக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுள்ளார்.

ஆனால், நெற்பயிர் சரியாக முளைக்காமல் மூன்று ரக நெற்பயிர்களாக காணப்படுவதால், கலப்பட நெல் கொடுக்கப்பட்டு தான் ஏமாற்றப்பட்டதாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இது சம்பந்தமாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் செய்து 15 நாட்களுக்குள் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தும், வேளாண்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாத காரணத்தால், மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்ததாக விவசாயி சீனிவாசன் தெரிவித்தார். மேலும், இதன் காரணமாக ஏக்கருக்கு 25,000 ரூபாய் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும்கவலையுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!