Skip to content
Home » நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது

நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது

  • by Senthil

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி அணை மீண்டும் நிரம்பியது. இந்தநிலையில் தற்போது அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.  அத்துடன் டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நேற்று இரவு  மேட்டூர் அணை மீண்டும் 120 அடியை எட்டியது. இதன் மூலம் ஒரே ஆண்டில் 3வது முறை மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!