Skip to content
Home » இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

  • by Senthil

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக (முதல்-மந்திரியாக) சுக்விந்தர் சிங் சுக்குவும் (வயது 58), துணை முதல்-மந்திரியாக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில், இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவி ஏற்றார் இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர்சிங் சுக்கு-க்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் , இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக பதவியேற்ற சுக்விந்தர் சிங் சுகுவுக்கு வாழ்த்துகள் உங்கள் உயர்வு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. இமாசல பிரதேச மக்களுக்கு சேவை செய்வதில் ,வெற்றிகரமான பதவிக் காலம் அமைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!