Skip to content
Home » வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூரில் உள்ள திருச்சி சேலம் சாலையில் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்தது. சிறு காயங்களுடன் லாரி டிரைவர் உயிர்த்தப்பினார்.  விசாரணையில் நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி டாரஸ் லாரி வந்துள்ளது. அப்போது  அய்யன் வாய்க்காலில் வலது புறமாக தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு வாய்க்காலில் கவிழ்ந்துள்ளது லாரி. இதில் டிரைவர் மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துகுறித்து வாத்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!