Skip to content
Home » காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

  • by Senthil

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர் இருந்த கார் ஒன்று அங்கு நோ என்ட்ரி வழியாக சென்று காரை பார்க் செய்ய முயன்றது.

அப்போது அங்கு பணியிலிருந்த தனியார் காவலாளி, நோ என்ட்ரி வழியாக கார் செல்லக்கூடாது என்று கூறி காரை வழி மறித்து நின்றார். ஆனால் அவர் மீது ஏற்றுவது போல் சென்று நோ என்ட்ரி வழியா அந்த கார் செல்ல முயன்றது. இதனால், காரில் வந்தவர்களை நோக்கி காவலாளி கேள்வி எழுப்பியதால், ஆத்திரமடைந்த பெண் காரில் இருந்து இறங்கி காவலாளியை தாக்க, அவருடன் இணைந்து காரில் இருந்த மற்றொரு பெண், 2 ஆண்கள் என 4 பேரும் சேர்ந்து அந்த காவலாளியை கடுமையாக தாக்கினர். மேலும், காவலாளியிடம்இருந்த 2 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் பைப்பை பிடுங்கி, அந்த பைப் உடையும் அளவுக்கு அவரை தாக்கினர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் காவலாளியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி  வந்தனர்.  இது தொடர்பாக இன்று காலை போலீசார் அவர்களை கண்டறிந்து  3 பேரை கைது செய்தனர்.முடிச்சூரை சேர்ந்த பிரபு இன்பதாஸ் (41), சண்முகப்பிரியா (38), கீர்த்தனா (29) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் ஒருவரை தேடி வருகிறார்கள். கைதான 3 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!