Skip to content
Home » குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்….. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

குத்தாலத்தில் கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம்….. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

குத்தாலத்தில் கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி உற்சவம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பத்தர்கள் புனித நீராடல்…… மயிலாடுதுறைஅருகே குத்தாலத்தில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு காவிரிதீர்த்த படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. சூரியபகவான் குத்தாலம் வந்து தவம் இருந்து சிவபெருமான் அருள் பெற்றதாக ஐதீகம். கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் தீர்த்தவாரி உற்சவம் குத்தாலம்

காவிரிதீர்த்த படித்துறையில் நடைபெறும் இதன் முக்கிய நிகழ்வான கார்த்திகை மாத கடைசி ஞாயிற்று கிழமையன்று ஸ்ரீ உக்தவேதீஸ்வரர், ஸ்ரீமன்மதீஸ்வரர், ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் ஆகிய ஆலயங்களில் இருந்து சாமி மற்றும் அம்மன் மங்கள வாதியங்கள் ஒலிக்க வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி மயில்வாகனம், வெள்ளி மூஷிக வாகனம், கருட வாகனம் ஆகியவற்றில் மங்கள வாதியங்கள் ஒலிக்க வீதி உலாவாக காவிரி கரைக்கு எழுந்தருளினர். அங்கு அஸ்திரதேவர்க்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!