Skip to content
Home » கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

கரூர் அருகே அதிமுக நிர்வாகி கொலை…?..

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தேவதானத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் தியாகராஜன் (55).  இவர் குளித்தலை ஒன்றிய அம்மா பேரவை செயலாளராக இருந்து வருகிறார். இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வலிப்பு நோய் ஏற்பட்டதில் நீரில் அடித்து செல்லப்பட்டார்.

வெகுநேரமாகி வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடி வந்த போது வாய்க்கால் படித்துறையில் அவர்கள் செருப்பு துண்டு இருப்பதை மட்டும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாய்க்கால் நீரில் அடித்து சொல்லப்பட்டாரா என்று முசிறி தீயணைப்பு துறையினர் உதவியுடன் நேற்று முழுவதும் தேடி வந்த நிலையில் உடலை கண்டுபிடிக்க

முடியவில்லை. இன்று காலை மீண்டும் உடலை தேடும் பணி துவங்கிய நிலையில் மருதூர் பஸ் ஸ்டாப் அருகே உள்ள வாய்க்கால் கரையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இது கொலையா?அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!