Skip to content
Home » மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

மகளிர் தினம்…மாறுவேடத்துடன் அசத்திய மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம். ….

ஆண்டு தோறும் மார்ச் 8ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஆழியார் சாலையில் உள்ள தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே பெண்மையை போற்றும் வகையிலும் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் சுட்டிக்காட்டும் வகையில் வேலு நாச்சியார் போன்ற வீர பெண்களை நினைவு கூறும் வகையிலும், மருத்துவம், கடற்படை, விமானப்படை போன்ற

பல துறைகளில் பெண்கள் சிறந்து விளங்குவதை எடுத்துறைக்கும் வகையிலும் மாணவிகள் மாறுவேடம் அணிந்திருந்தனர். குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை உணர்த்தும் வகையில் (Stop vilonce against women) என்ற வாசகத்துடன் மாணவிகள் வேடமணிந்தது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. ஆழியார் சாலையில் பள்ளி முன்பு துவங்கிய விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!