Skip to content
Home » கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோவை கோர்ட்டில் கொலை…. 2 பேர் விடுவிப்பு… 3 பேரிடம் விசாரணை…

கோைவ, நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை விசாரணைக்கு பின்பு போலீசார் விடுவித்த நிலையில் மூன்று பேரிடம் மட்டும் விசாரணை

கொலை குற்றத்திற்கு உதவியாக கூறி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த கோவை மாநகர தனிப்படை போலீசார் ஐந்து பேரிடம் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே கொலையில் நேரடியாக தொடர்புடைய ஏழு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில்.

கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கோவை மாநகர தனிப்படை போலீசார் ஐந்து பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அவர்களுக்கு உதவியதாக கூறி ஐந்து பேரை கைது செய்த கோவை மாநகர தனிப்படை போலீசார் – ஐந்து பேரில் இருவரை விசாரணைக்கு பின்பு விடுவித்த காவல்துறையினர் மீதமுள்ள மூன்று பேரிடம் மட்டும் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!