Skip to content
Home » ஈரோடு கிழக்கில் நாங்க ஜெயிக்கிறோம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

ஈரோடு கிழக்கில் நாங்க ஜெயிக்கிறோம்… திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

  • by Senthil

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் வளாகத்தில் 1519 பயனாளிகளுக்கு 937 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்  வழங்கும் விழா நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு மற்றும் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ்  ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

அப்போது அமைச்சர் கே.என் நேரு நிருபர்களிடம் கூறியதபாவது:  ஈரோடு  கிழக்கு தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் – திமுக நிச்சயம் வெற்றி பெறும், அதற்காக பணிகளை நாங்கள் இப்போதே ஆரம்பித்து விட்டோம் தொடர்ந்து அனைத்து அமைச்சர் பெருமக்களும் ஈரோடு வர உள்ளார்கள் அங்கு வந்து

ஒன்னரை ஆண்டு காலம் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிக்க இருக்கின்றோம்.

ஈரோடு நகரத்தைப் பொறுத்த அளவில் அடிப்படைத் தேவைகள் என்னென்ன தேவை என்பதை கேட்டறிந்து வாக்குகளை சேகரிக்க இருக்கிறோம்.  முதல்வர் அவர்கள் அவராகவே தோழமைக் கட்சிக்கு இந்த தொகுதியை விட்டு தந்து  கூட்டணி மாண்பை காத்திருக்கிறார். நாங்க அறிவிச்சிட்டோம் – நாங்க ஜெயிக்கிறோம் நாங்க தேர்தலுக்கு போறோம். மற்றவர்களைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!