Skip to content
Home » வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

  • by Senthil

தெலுங்கானாவின் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்கயாம்ஜல் நகராட்சி பகுதியில் அடிபட்லாவில் வசித்து வருகிறார் வைஷாலி ( 24). இவர் டாக்டராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு திடீரென 100 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் சூறையாடி விட்டு,  ரூமில் இருந்த பெண் டாக்டரை  காரில் கடத்தி சென்றுள்ளனர்.  அவர்களை தடுக்க முயன்ற பெற்றோரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதில் அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார். சாலையில் இருந்த கார் ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரச்சகொண்டா கூடுதல் காவல் ஆணையாளர் சுதீர் பாபு தலைமையிலான போலீசார் விசாரணை

மேற்கொண்டு வருகின்றனர்.  காதல் விவகாரத்தில் வைஷாலியை கடத்தியிருக்க கூடும் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். தொழிலதிபர் ஒருவர் மீது பெண்ணின் பெற்றோர் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். இந்நிலையில், பெற்றோரை தொடர்பு கொண்ட வைஷாலி நலமுடன் உள்ளேன் என கூறியுள்ளார். இதனை அடுத்து, போலீசார் பாதுகாப்புடன் மகளை பார்ப்பதற்காக அவரது தந்தை சென்றுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று  வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!