Skip to content
Home » காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

காதலிக்க மறுத்த சிறுமியை சுட்டுக்கொன்ற வாலிபர்…..

  • by Senthil

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் 15 வயது சிறுமியை 22 வயதான அரவிந்த் விஸ்வகர்மா என்ற வாலிபர் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வாலிபரின் கோரிக்கையை சிறுமி நிராகரித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி, தனது உறவினர் ஒருவருடன் பயிற்சி நிறுவனத்தில் இருந்து நேற்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அரவிந்த், சிறுமியில் தலையில் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளான். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தப்பி ஓடிய அரவிந்தை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!