Skip to content
Home » கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாதம் தோறும் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நேற்று  நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர்,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர்,எலுமிச்சை சாறு, மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து பொதுமக்கள் வழங்கிய நறுமணப் பூக்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது, தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டி,  நெவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை காட்டினார்.அதை தொடர்ந்து கூடியிருந்த  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!