Skip to content
Home » கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

கரூர் அருகே ஸ்ரீ புதுவாங்கலம்மன் கோவிலில் கும்பாபிஷே விழா….

  • by Senthil

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புதுவாங்கலம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 26.01.2023 அன்று கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக விழா முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று சிவாச்சாரியார் பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல்

காலையாக பூஜை, இரண்டாம் காலையாக பூஜை மற்றும் மூன்றாம் கால யாக பூஜை சிறப்பாக நடைபெற்றது.

இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட கலசத்திற்கு சிவாச்சாரியார் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது இதனைக் காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!