Skip to content
Home » லாரி மீது கார் மோதி விபத்து… போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி….

லாரி மீது கார் மோதி விபத்து… போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி….

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அவர்கள் பயணித்த கார் அதிவேகமாக வந்து திடீரென கண்டெய்னர் மீது மோதியதாக போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 2  பேர் சிந்து போலீஸ் ஸ்டேசன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அவரது மனைவி மது என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த சில மணி நிமிடத்தில் பொதுமக்கள் முயற்சி செய்து காரில் இருந்து உடலை வெளியே எடுத்தனர். உயிரிழந்த 2 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து நெலோகி  போலீஸ் ஸ்டேசனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!