Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது….

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சார் போலீசார் சின்னவளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கு இடமாக ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரணை செயதனர். அப்போது விசாரணையில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் கல்லாத்தூர் வடவீக்கம் பகுதியை சேர்ந்த விமல்ராஜ், ஜெயங்கொண்டம் அண்ணா நகரைச் சேர்ந்த சிவசந்திரன், அரசு மருத்துவமனை தெருவைச் சேர்ந்த முகமது யாசிக் என்பதும் தெரிய வந்தது இதையடுத்து அவர்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!