Skip to content

12 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கட்சிபெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் மணிகண்டன் (31). கூலி தொழிலாளியான இவர் 12 வயது சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து தப்பி வந்த சிறுமி பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்த விவரத்தை தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!