ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பபை கேட்டதும் திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்ததுடன், இனிப்புகளும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளூர் பேருந்து நிலையத்தின் அருகே பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.