Skip to content
Home » பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது…..தெறிக்கவிட்ட காளைகள்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது…..தெறிக்கவிட்ட காளைகள்

  • by Senthil

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி  இன்று மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் உறுதி மொழி எடுத்து தொடங்கியது. போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 335 மாடுபிடி வீரர்கள் மற்றும் 750 முதல் ஆயிரம் காளைகள் வரை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படுகிறது. முதலில் கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.  பெரும்பாலான காளைகள் சீறிப்பாய்ந்து பிடிபடாமல் எல்லைக்கோட்டை கடந்தது. காளைகளை அடக்க வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். முதல் சுற்றில் மஞ்சள் நிற பனியன் அணிந்து மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் பரிசாக இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படுகிறது. மேலும் தங்கம், வெள்ளி, நாணயங்கள், அண்டா முதல் சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, உள்ளிட்ட அனைத்து வீட்டு பொருட்களும், பல்வேறு உயர்ந்த பரிசுகளும் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. போட்டியை காண பல்லாயிரகணக்கான மக்களும் குவிந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!