Skip to content
Home » இஸ்லாமியர்களை மட்டும் என்ஐஏ குறிவைக்கிறதா? மத்திய அரசு பதில்..

இஸ்லாமியர்களை மட்டும் என்ஐஏ குறிவைக்கிறதா? மத்திய அரசு பதில்..

தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. ஒரு சமூகத்தினரை(இஸ்லாமியர்) மட்டுமே குறிவைத்து செயல்படுகிறதா? என நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், 2.12.2022 நிலவரப்படி, தேசிய புலனாய்வு முகமை கோவை குண்டுவெடிப்பு வழக்கு உட்பட 497 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு, வெளி நாட்டுடனான நட்புறவு, பன்னாட்டு ஒப்பந்தங்கள், தொடர்புகள் போன்றவற்றை அதன் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை விசாரிப்பதும், வழக்காடுவதும் தேசிய புலனாய்வு அமைப்பின் செயலாகும். சர்வதேச தாக்கங்கள் கொண்ட தீவிர வழக்குகளை எந்த ஒரு சார்பு அல்லது பாரபட்சமும் இல்லாமல் விசாரிப்பதற்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்படும். 2019 ஆம் ஆண்டு முதல் 2.12.2022 வரை 67 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 65 வழக்குகளில் தண்டனையும், 2 வழக்குகளில் விடுதலையும் பெறப்பட்டுள்ளது என்பதிலிருந்து தேசிய புலனாய்வு முகமை விசாரணையில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் தெரிகிறது.இவ்வாறு நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!