Skip to content
Home » இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த நபர்… அலறியடித்து ஓடிய உறவினர்கள்..

இறுதி சடங்கில் உயிருடன் எழுந்த நபர்… அலறியடித்து ஓடிய உறவினர்கள்..

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி கடந்த 30ம் தேதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். வெகுநேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நினைத்தனர். அவருக்கு இறுதிச்சடங்கு செய்து, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மாலை போட்டு அஞ்சலி செலுத்தியபோது திடீரென அவர் கண்விழித்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியும்- ஆச்சரியமும் அடைந்தனர். சுற்றி இருந்தவர்கள் பயந்து அங்கிருந்து ஓடினர். உடனே டாக்டருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டார். டாக்டர் பிரஜாபதியை பரிசோதனை செய்தபோது உயிர் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி டாக்டர் அறிவுறுத்தியுள்ளார். உடனடியாக மேல் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று இறந்ததாக நினைத்த நபர் உயிருடன் எழுந்த நிகழ்வுகள் இதற்கு முன்பும் நடந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!