Skip to content
Home » அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே  சேப்பாக்கம் பகுதியில்  லட்சுமணன் என்பவர் 100க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3  மணியளவில்  ஆடுகளை ஓட்டிச்சென்றபோது,  அவ்வழியே வந்த அரசுப் பேருந்து ஆடுகள் மீது மோதியுள்ளது. பஸ்  மோதியதில் 90 ஆடுகள் உயிரிழந்தன. அத்துடன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற உரிமையாளர் லட்சுமணன் என்பவரும் விபத்தில் உயிரிழந்தார். நெடுஞ்சாலையில்  ஆடுகள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் காண்போரை பதைபதைக்கச் செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!