Skip to content
Home » பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

பெண் மீது தாக்குதல்… பாஜக நிர்வாகி கைது…

  • by Senthil

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரியசெட்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னன் சிவா என்கிற சிவகுமார் (49). இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மேனகா 40 என்ற பெண்ணுடனும் தொடர்பு இருந்துள்ளது.

கணவனை இழந்த பெண்ணான மேனகா, கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவில் அருகே மீன் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு அடைக்கலம் தருவதாக கூறி  மன்னன் சிவா தனக்கு சொந்தமான வீட்டில்  மேனகாவை தங்க  வைத்து உள்ளார். அவரிடமிருந்து, 20 பவுன் நகைகளை வாங்கிய மன்னன் சிவா, மேகனாவிடம் அடிக்கடி பணம் கேட்டும் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் மேனகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவரை வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறி மன்னன் சிவா மிரட்டியுள்ளார். மேலும் தட்டி கேட்ட மேனகாவை மன்னன் சிவா தாக்கியுள்ளார் .

இது தொடர்பாக மேனகா, கிருஷ்ணகிரி டவுன் போலீசாரிடம் தன்னிடம் இருந்து நகையை வாங்கிக் கொண்டு அதைக் கொடுக்காமல் தன்னை மன்னன் சிவா அடித்து கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். வழக்கை விசாரித்த போலீசார் மன்னன் சிவா மேனகாவை மிரட்டியதை உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் இன்று அவரை கைது செய்தனர். பா.ஜ.க., கிழக்கு மாவட்ட செயலாளரான மன்னன் சிவா இதற்கு முன் தீபா அம்மா பேரவை, அ.ம.மு. க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தாவி  பொறுப்பு கிடைப்பதற்காக பா.ஜ.க.வில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!